வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Thursday, April 13, 2017

பிஎப் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கு காலக்கெடு நீட்டிப்பு

          பிஎப் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (இபிஎப்ஒ) தெரிவித்துள்ளது. முன்னதாக இபிஎப்ஒ ஆணையம் பிஎப் எண்ணுடன் ஆதாரை இணைப் பதற்கு கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி வரை கால அவகாசம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

            தற்போது ஏப்ரல் மாதம் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இபிஎப்ஒ ஆணையம் தெரிவித் துள்ளது. அதுமட்டுமல்லாமல் 50 லட்சம் ஓய்வூதியதாரர்கள் தங்களது ஓய் வூதிய கணக்கை ஆதார் எண்ணுடன் இணைத்து டிஜிட்டல் லைப் சான்றிதழை ஒப்படைப்பதற்கான கால அவகாசமும் ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல முறை ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. லைப் சான்றிதழை டிஜிட்டலில் சமர்பிக்க முடியாத ஓய்வூதிய தாரர்கள் வங்கிகளின் சென்று சமர்பிக்கலாம் என சமீபத்தில் இபிஎப்ஒ ஆணையம் உத்தர விட்டது. மேலும் டிஜிட்டலில் ஏன் சமர்பிக்கமுடியவில்லை என்பதற்கு காரணத்தை கூற வேண்டும் என்று கூறியிருந்தது.

No comments:

Post a Comment