வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Wednesday, May 10, 2017

நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தில் வாகன ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு.



திருச்செங்கோடு நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தில் வாகன ஓட்டுநர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:-

 திருச்செங்கோடு நடமாடும் மண்பரிசோதனை நிலையத்துக்கு, ஒரு கனரக வாகன ஓட்டுநர் பணிக்குத் தகுதியான பொதுப்பிரிவில் முன்னுரிமையுள்ள விண்ணப்பதாரர்கள் புதன்கிழமைக்குள் விண்ணப்பிக்கலாம்.
 விண்ணப்பதாரர்கள் சொந்த கையெழுத்தில், நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ நாமக்கல், வேளாண்மைப் பொறியியல் துறை, செயற்பொறியாளருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

 குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நல்ல உடற்தகுதி பெற்று, பார்வைத்திறன் சரியாக இருக்க வேண்டும். நடைமுறை பயன்பாட்டில் உள்ள கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
 அதிகபட்ச வயது 30-க்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், அருந்ததியர் வகுப்பினர்களுக்கு 5 வயது தளர்வு உண்டு. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல்துறை, பி.எஸ்.கே.டவர்ஸ், சேலம் சாலை, நாமக்கல் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்றார் ஆட்சியர்.

No comments:

Post a Comment