வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Sunday, August 20, 2017

30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 2.50 லட்சம் பள்ளிகள் இணைப்பு: மாநிலங்களின் ஆலோசனை கேட்கிறது மத்திய அரசு

நாடு முழுவதும் 30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள இரண்டரை லட்சம்பள்ளிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்க மாநில அரசுகளின் ஆலோசனையை
மத்திய அரசு கேட்டுள்ளது.
மத்திய அரசு மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த அனைவருக்கும் கல்விதிட்டம்அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் உள்ளிட்ட பல்வேறுதிட்டங்களை செயல்படுத்துகிறதுஇவை தவிர இடைநின்ற மாணவர்களைகண்டறிய ஒவ்வொரு ஆண்டும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பும்நடத்தப்படுகிறது.


இருப்பினும் அரசு பள்ளிகளில் மாணவ மாணவியர் எண்ணிக்கை கணிசமாககுறைந்து வருகிறதுபல்வேறு பள்ளிகள் இதன் காரணமாக மூடப்பட்டுள்ளன.மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை,தரமான கல்வி கிடைப்பது இல்லை என்ற புகார்களும் எழுந்துள்ளனமத்திய,மாநில அரசுகள் கல்விக்காக பெருமளவு தொகை செலவிடும் போது அவைஅரசு பள்ளி மாணவ மாணவியரை முழுமையாக சென்றடையவில்லை என்பதுஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளதுமேலும் தேசிய அளவில்மாணவர்களிடையே அடைவு திறன் தேர்வுகள் நடத்தப்படும் வேளையில்மாணவர்களின் கல்வி தரம் மெச்சப்படும் நிலையில் இல்லை என்பதும்கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தொடக்க நிலையில் கல்வி தரத்தை மேம்படுத்த அரசுபள்ளிகளில் கூடுதல் கவனம் செலுத்த மத்திய மனித வள மேம்பாட்டுத்துறைமுடிவு செய்து மாணவர்கள் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளை ஒன்றுடன்ஒன்று இணைக்கும் முடிவுக்கு வந்துள்ளதுஒரு வருவாய் கிராமத்தில் உள்ளஎல்லா அரசு பள்ளிகளையும் ஒன்றோடு ஒன்று இணைக்க மத்திய அரசுஉத்தரவிட்டுள்ளதுஇது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம்தயார் செய்த மசோதாவிற்கு மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டு கடிதங்கள்அனுப்பி வைக்கப்பட்டுள்ளனபுதியதாக குழந்தைகளை சேர்க்க முடியாத நிலைஉள்ள பள்ளிகள், 30 குழந்தைகளுக்கு கீழ் மாணவர்கள் எண்ணிக்கையைகொண்ட பள்ளிகள்ஆசிரியர்கள் எண்ணிக்கையில் குறைபாடுகள் உள்ளபள்ளிகள் இந்த இணைப்பு பட்டியலில் இடம் பிடிக்கிறதுமொத்தம் 2 லட்சத்து50 ஆயிரம் பள்ளிகள் இந்த வகையில் இணைக்கப்படும் என்று கூறப்படுகிறது.


தொடக்கநடுநிலை பள்ளிகள் இந்த இணைப்பு பட்டியலில் அதிகம் இடம்பெற்றுள்ளதுஇணைப்பு அடிப்படையில் மாற்றம் பெறுகின்ற பள்ளிகள்பின்னர் மாதிரி பள்ளிகளாக செயல்படும்பள்ளிக்கு தேவையான இடவசதிகளை ஏற்படுத்துதல்மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்தல்அதற்குேதவையான அளவு ஆசிரியர்கள் எண்ணிக்கையை உயர்த்துதல்கல்வியின்தரத்தை மேம்படுத்துதல்மாணவர்கள் இடைநிற்றலை தடுத்தல் போன்றவைஇந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும்மாநில அரசுகளின் கருத்துகள்கேட்கப்பட்ட பின்னர் மசோதாவிற்கு இறுதிவடிவம் கொடுக்கப்படும்.

No comments:

Post a Comment