வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Wednesday, October 11, 2017

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பள உயர்வுக்கான அரசாணை இன்று மாலை வெளியிடப்படும் என்றும் இந்த ஊதிய உயர்வு இன்னும் 2 நாட்களில் அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது!!

       

7-ஆவதுஊதியக் குழு பரிந்துரையைதமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளதால் அரசுஊழியர்களுக்கு அடிப்படைஊதியம் 20% உயர்கிறது.கடந்த சில நாள்களுக்குமுன்பு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளைஅமல்படுத்தக் கோரி அரசுஊழியர்கள்-ஆசிரியர்களின்கூட்டமைப்பான ஜாக்டோஜியோ அமைப்புஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர். இதற்குஉயர்நீதிமன்ற நீதிபதிகிருபாகரன் கடும்கண்டனம் தெரிவித்தார்.


இதுதொடர்பாக சென்னைஉயர்நீதிமன்றத்தில்தொடரப்பட்ட வழக்கில் 7-ஆவது ஊதிய குழுபரிந்துரைகளை அக். 13-ஆம் தேதிக்குள்அமல்படுத்த வேண்டும்என்று தமிழக அரசுக்குநீதிபதி உத்தரவிட்டார்.இந்நிலையில் தமிழகஅமைச்சரவைக் கூட்டம்தலைமை செயலகத்தில்முதல்வர் பழனிசாமிதலைமையில்நடைபெற்றது.இக்கூட்டத்தில், அரசுஊழியர்கள்,ஆசிரியர்களுக்கான 7-வதுஊதியக்குழு பரிந்துரைகள்குறித்து அமைக்கப்பட்டவல்லுனர் குழுவின்அறிக்கை குறித்துவிவாதிக்கப்பட்டது.இதையடுத்து 7-ஆவதுஊதியக் குழுபரிந்துரைகளை ஏற்கஅமைச்சரவையில் முடிவுசெய்யப்பட்டது. இதனால்அரசு ஊழியர்களின்அடிப்படை ஊதியம் 20சதவீதம் வரை உயருகிறது.இதுதொடர்பாக இன்றுமாலை அரசாணைவெளியிடப்படும் என்றும்இந்த ஊதிய உயர்வுஇன்னும் 2 நாட்களில்அமல்படுத்தப்படும் என்றுதெரிகிறது.

No comments:

Post a Comment