வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Tuesday, May 2, 2017

மே 20, 22-ம் தேதிகளில் திருச்சியில் விமானப் படைக்கு ஆள் தேர்வு



மே 20, 22-ம் தேதிகளில் திருச்சியில் விமானப் படைக்கு ஆள் தேர்வு

இந்திய விமானப்படையில் சேர மே 20 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ஆள் தேர்வு முகாம் திருச்சியில் நடத்தப்படுகிறது.இது தொடர்பாக பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் தொடர்பு அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

இந்திய விமானப் படையில் ஏர்மேன் பணியில் சேரு வதற்கான ஆள் தேர்வு முகாம் வரும் 20 மற்றும் 22-ம் தேதிகளில் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இதில் பங்கேற்க விண் ணப்பதாரர்கள் 1997 ஜூலை 7 மற் றும் 2000 டிசம்பர் 20-ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற் றிருக்க வேண்டும்.20-ம் தேதி நடக்கும் முகாமில் மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவ கங்கை, கிருஷ்ணகிரி, திருச்சி, விழுப்புரம், சேலம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், திருவா ரூர், கரூர்மற்றும் புதுச்சேரி யூனி யன் பிரதேசத்தைச் சேர்ந்த காரைக் கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.

22-ம் தேதி நடக்கும் முகாமில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கன்னியாகுமரி, தேனி, தஞ்சாவூர், திருவண்ணா மலை, திண்டுக்கல், தருமபுரி, கோயம்புத்தூர், திருப்பூர், நாமக் கல், ஈரோடு, அரியலூர், நீலகிரி, பெரம்பலூர் ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.

இதுகுறித்து கூடுதல் விவரங்கள் அறிய www.airmenselection.gov.in என்ற இணையதளத்தை பார்க்க லாம். அல்லது 044-22390561, 22395553 (விரிவு-7833) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment