'EMIS' இணையதளம் முடங்கியது - பள்ளிக்கல்வி துறை பரிதவிப்பு
மாணவர்களின் விபரங்களை, மின்னணு முறையில் சேகரிக்கும், 'எமிஸ்'இணையதளம், ஒரு வாரமாக முடங்கி உள்ளது.தமிழக பள்ளி மாணவர்களின்விபரங்களை, மின்னணு முறைக்கு மாற்ற, 'எமிஸ்' எனப்படும், கல்விமேலாண்மை தகவல் அமைப்பு திட்டம்அறிவிக்கப்பட்டது.
புதிய முகவரி
சென்னை, அண்ணா பல்கலை தொழில்நுட்ப உதவியுடன், பள்ளிக்கல்வித்துறையே, 'எமிஸ்' இணையதளத்தை பராமரித்தது. தற்போது, அந்த பொறுப்பு,தனியார் நிறுவனத்திற்கு தரப்பட்டுள்ளது. இதையடுத்து, புதிய இணையதளமுகவரி தரப்பட்டு, அனைத்து பள்ளிகளும், இந்த இணையதளத்தைபயன்படுத்தலாம் என, கல்வித் துறை அறிவித்தது.
ஆனால், புதிய இணைய தளத்தில், தொடர்ந்து தொழில்நுட்பக் கோளாறுஏற்படுகிறது. இரு நாட்களாக, இணையதளம் மொத்தமாக முடங்கி உள்ளது.
இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:'எமிஸ்' திட்டத்தில், மாணவர் பெயர்,ரத்தப் பிரிவு, பெற்றோர் விபரம், மொபைல் போன் எண், ஆதார் எண், வங்கிகணக்கு எண், குடும்ப உறுப்பினர் விபரம் என, பல தகவல்களை சேகரிக்கவேண்டும். ஏற்கனவே,2016-2017 வரை, இந்த தகவல்களை இணையதளத்தில்இணைத்துள்ளோம்.
அழுத்தம்
தற்போது, மீண்டும், புதிய இணையதளத்தில் புதிதாக இணைக்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. ஆனால், புதிய இணையதளம் மொத்தமாக முடங்கிஉள்ளது.
அதிகாரிகளோ, கால அவகாசம் கொடுத்து, தகவல்களை பதிவேற்றம் செய்ய,அழுத்தம் தருகின்றனர். ஆனால், இணைய தள தொழில்நுட்பக் கோளாறு,இன்னும் சரி செய்யப்படவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்
No comments:
Post a Comment